கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குதிரைகள் அணி வகுப்பு போட்டிகளில் குதிரைகள் நடத்திய சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தமிழ்நாடு,கேரளா,கர்நாடாகா,ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய அளவில் பிரபலமான குதிரைகள் அணி வகுப்பு கண்காட்சி கோவை நவ இந்தியா பகுதியில் , தமிழ்நாடு இண்டிஜீனியஸ் ஹார்ஸ் சொசைட்டி சார்பாக துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியினை முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.ஒருங்கிணைப்பாளர் சக்தி பாலாஜி ஒருங்கிணைத்த இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த குதிரைகள் ஒய்யாரமாக நடை நடந்து,
குதிரை வீர்ர்களின் கட்டளைக்கு இணங்க செயல்பட்டு,நடனம் ஆடுவது,உயரம் தாண்டுவது என பல்வேறு சாகசங்களை செய்தன. இரண்டாவது நாளாக நடைபெற்ற அணிவகுப்பு விழாவில் ஜே.ஆர்.டி.ராஜேந்திரன்,வின்னர்ஸ் இந்தியா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். குதிரை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டு வரும் குழந்தை பருவ மாணவ, மாணவியர்களும்,வீரர்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என நிரூபிக்கும் வகையில் குதிரையில் அமர்ந்தபடி சாகசம் செய்து அசத்தினர்.
பால் பல் குதிரைகள்,2 பல் குதிரைகள், 4 பல் குதிரைகள் என்ற பிரிவுகளில் நடைபெற்ற இதில்,இந்திய வகை குதிரைகளான சிந்தி, மார்வாரி உள்ளிட்ட பல்வேறு ரக குதிரைகள் கலந்து கொண்டன.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு