February 23, 2019
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆண்டு விழாவில் காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவ,மாணவிகள் நடனமாடி அசத்தினர்.
இந்திய செஞ்சிலுவை சங்கம் கோவை மாவட்ட கிளையின் சார்பில் இயங்கி வரும் பெண் குழந்தைகளுக்கான கம்யூனிட்டி கேர் ஹோம் தளிர் அமைப்பின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கோவை அவினாசி சாலை ஆருத்ரா அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் தலைவர் நந்தினி ரங்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.தொடர்ந்து பி.எஸ்.ஜி.மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பேசினார்.
இவ்விழாவில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ,மாணவிகள் பல்வேறு வேடமணிந்து நடனமாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விழாவின் இறுதியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் துணை தலைவர் குமுதா பழனிசாமி நன்றி தெரிவித்தார்.