• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆண்டு விழா

February 23, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆண்டு விழாவில் காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவ,மாணவிகள் நடனமாடி அசத்தினர்.

இந்திய செஞ்சிலுவை சங்கம் கோவை மாவட்ட கிளையின் சார்பில் இயங்கி வரும் பெண் குழந்தைகளுக்கான கம்யூனிட்டி கேர் ஹோம் தளிர் அமைப்பின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கோவை அவினாசி சாலை ஆருத்ரா அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் தலைவர் நந்தினி ரங்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.தொடர்ந்து பி.எஸ்.ஜி.மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பேசினார்.

இவ்விழாவில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ,மாணவிகள் பல்வேறு வேடமணிந்து நடனமாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விழாவின் இறுதியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் துணை தலைவர் குமுதா பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க