• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற அதுல்யா சீனியர் கேர்-ன் “முதியோரை கனிவுடன் பராமரித்தல்” வாக்கத்தான்

September 1, 2024 தண்டோரா குழு

இந்தியாவில் முதியோர் பராமரிப்பு மற்றும் உதவப்படும் வாழ்க்கை சேவை பிரிவில் முன்னணி அமைப்பாக திகழும் அதுல்யா சீனியர் கேர், கோயம்புத்தூரின் ரேஸ் கோர்ஸ் சாலையில் இன்று, “முதியோரை கனிவுடன் பராமரித்தல்” (“Caring for a Senior”) என்ற பெயரில் ஒரு வாக்கத்தான் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.

மூத்தகுடிமக்களின் நலவாழ்வு மற்றும் கண்ணியத்தை வலியுறுத்திய இந்நிகழ்வில் தன்னார்வலர்கள்,கார்ப்பரேட் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என
200-க்கும் அதிகமான நபர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

இந்நிகழ்வை காட்சிப்படுத்தும் டி-ஷர்ட்கள் மற்றும் தொப்பிகளை அணிந்த பங்கேற்பாளர்கள் இந்த நடை பயணத்தில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மூத்தகுடிமக்களின் தனித்துவமான தேவைகளை கனிவுடன் பரிசீலிக்கவும் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொள்ளவும் பங்கேற்பாளர்களையும் மற்றும் பார்வையாளர்களையும் வலியுறுத்துவதாக அமைந்த இந்த வாக்கத்தான் நிகழ்வு முதியோர் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலுவாக எடுத்துரைத்தது.

இந்த வாக்கதான் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதுல்யா சீனியர் கேர்-ன் நிறுவனரும் & தலைமை செயல் அலுவலருமான ஸ்ரீனிவாசன் கூறுகையில்,

“இன்றைய வாக்கத்தான் நிகழ்வில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பாளர்களின் ஆர்வமிக்க பங்கேற்பு, நமது சமூகத்தில் முதியோர் பராமரிப்பு மீது வளர்ந்து வரும் விழிப்புணர்வு மற்றும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. உண்மையிலேயே முக்கியமான குறிக்கோள்களுக்காக மக்களை ஒருங்கிணைக்கிற செயல்தளங்களை உருவாக்குவதில் அதுல்யாவில் செயல்படும் நாங்கள் நம்புகிறோம்.நமது முதியோர்களின் மிக முக்கிய தேவைகள் பற்றி விழிப்புணர்வை இன்றைய நிகழ்வு உயர்த்தியிருக்கிறது மற்றும் ஒருங்கிணைந்த சமூக நடவடிக்கையின் சக்திக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

நமது சமூகத்தின், குறிப்பாக நமது உண்மையான அக்கறையையும், பெருமதிப்பையும் பெறுவதற்கு தகுதியுள்ள நமது மூத்தகுடிமக்களின் நலவாழ்வு பற்றி அதுல்யாவில் நாங்கள் ஆழமான அக்கறை கொண்டிருக்கிறோம்.நமது முதியோர்கள் பராமரிக்கப்படுவது மட்டுமன்றி கொண்டாடப்படவும்,மதிக்கப்படவும் வேண்டும் என்பதற்காக அக்கறை மற்றும் கனிவு கலந்த கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக நாங்கள் திட்டமிட்டு செயலாற்றும் பல வழிமுறைகளுள் இந்த வாக்கத்தான் நிகழ்வும் ஒன்றாகும்” என்று கூறினார்.

மேலும் படிக்க