• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் முறைகேடு நடைபெறுவதாக புகார்

January 3, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒரு சார்பினருக்கு மட்டும் டோக்கன்கள் விநியோக்கிக்க படுவதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த மனுவில்

“கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை என்ற அறக்கட்டளை கோயம்புத்தூர் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து அதன் மூலம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சிறந்த முறை நடைபெறும் மாடுபிடி வீரர்கள் நலம் மற்றும் ஜல்லிக்கட்டு காலை வளர்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையில் மாவட்டம் தோறும் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் இருந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கோயம்புத்தூரில் எல்.என்.டி பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கட்டு போட்டி வரும் 9-ந் தேதி நடைபெற உள்ள சூழ்நிலையில் அந்த போட்டியில் கலந்துகொள்ள எங்களது அறக்கட்டளையை சேர்ந்த உறுப்பினர்கள் விழா கமிட்டி தொடர்பு கொண்டபோது மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் விண்ணப்பங்கள் கொடுக்கச் சென்றபோது ஏற்க மறுத்துள்ளனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுத்து முறையாக டோக்கன் வழங்கி ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் கலந்து கொள்ள ஆவனம் செய்ய வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் மாநிலத் தலைவர் ஜெயகார்த்தி,

கோவையில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சில அமைப்புகளை சார்ந்தவர்களுக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டு மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதனால் விவசாயிகள் பலரும் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு பிற மாவட்டங்களில் டோக்கன்கள் வழங்குவதாக கூறிய அவர் ஜல்லிக்கட்டு நடைபெறும் பொது இடத்திலேயே டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில் சில அமைப்புகள் தலையீடு இருப்பதாகவும் அதன் காரணமாகவே இதில் அரசியல் தலையீடுகளும் வருகின்றது என கூறினார். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் எங்கள் பேரவை சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் என கூறினார்.மேலும் ஜல்லிக்கட்டை என்றும் அரசியலாக பார்க்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க