• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 74.81 சதவீதம் வாக்குகள் பதிவு

July 11, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நேற்று 1 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தமிழக மாநில தேர்தல் ஆணையத்தால் நேர்தல் நடத்தப்பட்டது. இதில் 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 1 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிறப்பு நேர்வாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குப்பதிவு செய்ய பாதுகாப்பு உபகரணங்களுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 வாக்குச்சாவடிகளில் 74.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைநியாக நல்ல முறையில் நடைபெற்றது. பதிவான வாக்குகளின் பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் உரிய காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க