• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தொழில்நெறி வழிகாட்டு முறை குறித்த விழிப்புணர்வு பேரணி

July 9, 2018 தண்டோரா குழு

கோவையில் தொழில்நெறி வழிகாட்டு முறை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி குறித்த விழிப்புணர்வு முகாம் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளும்,பல லட்சக்கணக்கான கலை அறிவியல் பட்டதாரிகளும் படித்து முடித்த பின்பு வேலை கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்தே திறன் பயிற்சிகளை மாநில அரசு வழங்கி வருகிறது.திறன் பயிற்சிகளை கற்றுக்கொண்டு அரசு காட்டக்கூடிய வழிகாட்டுதல் மூலம் வேலை வாய்ப்பை பெறும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,மற்றும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் பயிற்சி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.இந்த பேரணியில் திறன் பயிற்சி மற்றும் தொழில்நெறி சார்ந்த பாதகைகளை ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க