• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

June 15, 2022 தண்டோரா குழு

கோவை க.க சாவடி திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (36). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரதிபா (34).. தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு சதிஷ்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.இதை மனைவி பிரதிபா கண்டித்துள்ளார்.இதனால் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இந்நிலையில் மறுநாள் காலை பிரதிபா கோபித்துக் கொண்டு தர்மபுரியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் விரக்தியில் இருந்த சதீஷ்குமார் நேற்று மதுக்கரை-திருமலையாம்பாளையம் ரோட்டில் உள்ள தோட்டத்தில் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜஸ்தானை சேர்ந்தவர் முகேஷ் (20). சம்பவத்தன்று இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க