• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தொடர் மழை!

May 25, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து காலை முதலே மழை பெய்து வருகிறது.தென் மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கோடை மழை சராசரி அளவை விட கூடுதலாக பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று வழக்கத்திற்கு மாறாக காலை முதலே கோவையில் காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர்,சூலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் வெயிலின் தாக்கம் என்பது முற்றிலும் குறைந்து குளிர்ந்த காலநிலை காணப்படுகிறது.தொடர் மழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் அதிகரித்து வருகிறது.நேற்று முதல் , இதுவரை 43 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.அதிகபட்சமாக அன்னூர் பகுதியில் 16 மில்லி மீட்டர் மழையளவும், குறைந்த பட்சமாக வால்பாறையில் 1 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

மேலும் படிக்க