• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

July 5, 2019 தண்டோரா குழு

வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த கோரி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்
,பள்ளர் , குடும்பர் , பண்ணாடி , காலாடி , தேவேந்திர குலத்தார் , வாதிரியார் ஆகிய உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வழங்க வேண்டும்.

சாதிவாரி அடிப்படையில் மக்கட் தொகை கணக்கெடுப்பு நடத்தி தேவேந்திர குல வேளாளர்களுக்கு 20 % தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை SC பட்டியலில் இருந்து விடுவித்து MBC மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோசங்கள் எழுப்பினர்.

மேலும் படிக்க