March 18, 2019
தண்டோரா குழு
கோவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 10 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்காடு – கோவை சாலையில் வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவரின், காரினை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
அப்போது அபிலாஷ் தனது நண்பர் மெர்வின் என்பவருக்கு அளித்து திரும்ப பெற்ற 10 இலட்ச ரூபாய் பணம் மற்றும் அவரிடம் இருந்த 64 ஆயிரம் பணத்தோடு கோவையில் உள்ள தனது நண்பரை பார்க்க வந்ததாக அபிலாஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை அளித்து பணத்தை திரும்ப பெறலாம் என கூறியுள்ள அதிகாரிகள், பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.