• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தேசிய கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர் இராசாமணி

August 15, 2020 தண்டோரா குழு

கோவையில் வ.உ.சி மைதானத்தில் நாட்டின் 74 வது சுதந்திர தின விழா சமூக இடைவெளி பின்பற்றி, முக கவசம் அணிந்து கொண்டாட்டப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் இராசமணி தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் இவ்விழாவில் மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அரசு மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் ஆகியோர் பங்குபெற்றனர்.

கோவையில் கொரொனா தொற்று தடுப்பு முன் களப்பணியில் சிறப்பாக பணியாற்றிய 90 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது, அதில் சுகாதாரத்துறையில் 28 பேருக்கு, காவல்துறையில் 23 பேருக்கும், வருவாய் துறையை சேர்ந்த 20 பேருக்கும், நகராட்சி நிர்வாகத்தில் 18 பேருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆட்சியர் கையில் விருதுகளை பெற்றவர்கள், தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

மேலும் படிக்க