• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தேசிய அளவிலான கராத்தே போட்டி

October 12, 2019 தண்டோரா குழு

வரும் 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் போட்டியாளர்களை தயார் செய்யும் விதமாக தேசிய அளவிலான கராத்தே போட்டி கோவையில் நடைபெற்றது.

கோவையில் ஜித்தோ லீக் 2019 எனும் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் துவங்கியது.முன்னதாக இந்திய கராத்தே சங்க தலைவர் ஆர்.தியாகராஜன் போட்டிகளை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, பீகார், உத்திர பிரதேசம், உள்ளிட்ட 18 மாநிலங்களில் இருந்து 1200 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜூனியர் மற்றும் சீனியர் என 12 வயதிற்கு உட்பட்ட 12 வயதிற்கு மேல் என இரு பிரிவாக இரண்டு நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கட்டாஸ் என்ற தனிநபர் தற்பாதுகாப்பு மற்றும் குமிட்டே என்ற இரு நபர் சண்டை என்ற வகையில் போட்டிகள் நடைபெற்றது.

இது குறித்து கோவை மாவட்ட கராத்தே சங்க தலைவர் முத்துராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வரும் 2020 ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் நடைபெற உள்ள கராத்தே போட்டிகளில் வீரர்களை தயார் செய்யும் விதமாக இந்த போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், சர்வதேச அளவில் கராத்தே போட்டிகளில் உள்ள சட்ட திட்டங்களை இது போன்ற போட்டிகளில் வீரர்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க