• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம்….!

July 8, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை தலைமை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது அடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை தலைமை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர், கோவை மாநகர காவல் ஆணையாளர், மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையர், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் உட்பட அனைத்து துறைகளை சேர்ந்த தலைமை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,

கோவை மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் கூட மழைநீர் தேங்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, ஊராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, 8409 கிமீ க்கு மழைநீர் வடிகாலுக்கான கட்டமைப்புகள் உள்ளதாகவும் அதில் 5407 கிமீ அளவிற்கு தற்போது வரை தூர்வாரப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஏறதாழ 65 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு மழையின் பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த ஆண்டு இல்லாத வண்ணம் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முதல்வரின் வருகை மற்றும் அரசு நிகழ்ச்சிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.15ம் தேதி அதிக பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

கோவையில் கொரோனா தொற்றை பொருத்தவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தேவையான அளவிற்கு கட்டமைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் தான் உள்ளதாகவும் கூறினார்.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை 100% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றும், 99% மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ள முதல் மாவட்டமாக கோவை மாவட்டம் விளங்குவதாகவும் கூறினார். ஸ்காட்லாண்டில் கடலில், காற்றாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று உற்பத்தி துவங்கியுள்ளதாகவும் அதனை முதல்வரின் அறிவுறுத்தலின்படி சென்று பார்வையிட்டதாகவும், அதனை தமிழகத்தில் செயல்படுத்த ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

அது குறித்து முழு ஆய்வு மேற்கொண்ட பின்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஆதாரங்கள் திரட்டப்பட்ட பின் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார். சில இடங்களில் பொதுமக்கள் எவ்வித புகார் அளிக்காமலேயே ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்துவதாகவும் புகார் மனுக்கள் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சாலை சீரமைப்பு பணிகளை பொருத்தவரை டெண்டர் விடப்பட்ட இடங்களில் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகவும், சில இடங்களில் டெண்டர் முடிவு செய்த பின்பு சாலை சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுவிடும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்தாலும் தொழில்துறையின் தலைநகராக கோவையை உருவாக்க வேண்டும் என்பதே முதல்வரின் லட்சியம் என தெரிவித்தார். மேலும் பாதிப்புகள் அடைந்த வீடுகள் சாலைகள் குறித்து கிராம வாரியாக ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் பாலடைந்த வீடுகள் சாலைகள் இருந்தால் அதனை சீர் செய்வதற்கான நிதிகளை முதல்வர் அளித்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க