• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை சுத்தியலால் அடித்து கொன்ற வாலிபர்

June 15, 2020 தண்டோரா குழு

கோவையில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை சுத்தியலால் அடித்து கொன்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நேரு நகர் பகுதியை சேர்ந்த திலகவதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்த பத்மநாபன் என்பவரும்,திலகவதியும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்தனர். பத்மநாபனும் கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வசித்து வருகிறார்.

இந்தநிலையில், இருவருக்கும் இடையேயான நட்பு கள்ளக்காதலாக மாறியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திலகவதியை, பத்மநாபன் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. திலகவதி தயக்கம் காட்டி வந்ததால், அவர் மீது சந்தேகம் கொண்ட பத்மநாபன், சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திலகவதி மாயமானதாக கூறி, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து, தகரகொட்டாய் என்கிற இடத்தில் இருவரது சடலங்களை போலீசார் மீட்டனர். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க