April 3, 2018 தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி இன்று(ஏப் 3) திமுகவினர் கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.இதனைத்தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.