January 7, 2021
தண்டோரா குழு
கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் ஒரு வாகனம் மழை நீரில் சிக்கியுள்ளது.
கோவையில் திடீரென வெளுத்து வாங்கிய மழையால் கோவை நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத குழாய் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து நிலையில், கோவையில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் திடீரென பலத்த மழை பெய்தது.
இதில் கோவையின் முக்கிய நகரான காந்திபுரம், 100 அடி ரோடு, அவிநாசி ரோடு, சிங்கநல்லூர், பூ மார்க்கெட், புரூப் அண்ட் சாலை, கிக்கானி பள்ளி போன்ற பகுதிகளில் பாலங்களின் அடியில் மழை நீர் சூழ்ந்துள்ளது.இதில் குறிப்பாக கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் ஒரு வாகனம் மழை நீரில் சிக்கியுள்ளது. தகவலறிந்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அதிகாலை முதலே ராட்சத குழாய்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தி சாலை ஒழுங்குபடுத்தும் பணியிலும்,போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் ராட்சத குழாய்கள் மூலம் தேங்கிய மழைநீர் களை அப்புறப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.கோவையில் திடீரென பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் மிகவும் குளுமையாக காட்சியளிக்கின்றது.
மேலும் 5 நாட்கள் தொடர் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை முதலே கோவை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருண்ட வானிலை நிலவுகிறது மாநகராட்சி ஊழியர்களின் உடனடி நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கோவையில் போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.