• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் திடீரென இரண்டு ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்து நாசம்

January 29, 2021 தண்டோரா குழு

கோவை முத்துகவுண்டன் புதூர் பகுதியில் இரண்டு ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆம்னி பஸ்கள் பெருமளவில் இயக்கபடாமல் உள்ளது.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் கோவை முத்துகவுண்டன் புதூர் பகுதியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென இரண்டு ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிய துவங்கியது. தீ கட்டுபடுத்த முடியாமல்இரண்டு ஆம்னி பேருந்துகளும் முற்றிலுமாக எரிந்து நாசமானது. பேருந்துக்கு அருகில் மக்கள் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து நீண்ட நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். பல லட்சக்கணக்கான மதிப்புள்ள பேருந்துகள் எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க