• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தவைவர்கள் சிலைகள் துணி வைத்து மூடப்பட்டது

March 14, 2019 தண்டோரா குழு

தேர்தல் நடத்தை விதி அமல் படுத்தப்பட்டதால் கோவையில் தலைவர்களின் சிலைகள் துணி வைத்து மூடப்பட்டது

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு உள்ளதையடுத்து கோவையில் , ஜெயலலிதா, அண்ணா மற்றும் எம் ஜி ஆர் சிலைகள் துணிகள் வைத்து மூடப்பட்டது.தேர்தல் அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு உள்ளதையடுத்து, கட்சி ரீதியான போஸ்டர்கள் , மற்றும் சிலைகளை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் மறைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையை அடுத்து அண்ணா சிலை சந்திப்பு பகுதி அருகே, அறிஞர் அண்ணாவின் சிலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை, எம் ஜி ஆர் சிலை உள்ளது. இந்த சிலைகளை ஊழியர்கள் துணியை கொண்டு மறைத்து வைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைவர்களின் சிலையும் மறைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க