• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தனியார் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

January 27, 2022 தண்டோரா குழு

கோவை மாதம்பட்டி சென்னனூர் தனியார் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை பேரூர் மாதம்பட்டி அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பேரூர் போலீசார் அங்கு சென்று சிறு காயங்களுடன் சடலமாக கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பிரசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கடந்த சில தினங்களாக ஆதரவற்ற நபர் ஒருவர் அப்பகுதியில் சுற்றி வந்ததாக பொதுமக்கள் கூறி உள்ளனர். இருந்தவர் அவர் தானா? அவர் யார் என்பதும் குறித்தும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க