• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தடையை மீறி செயல்பட்டு வந்த பிரபல ஜவுளி கடைகளுக்கு சீல் !

May 24, 2020 தண்டோரா குழு

கோவையில் தடையை மீறி செயல்பட்டு வந்த பிரபல ஜவுளி கடைகளை பூட்டி கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பெரிய ஜவுளி கடைகள் திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனை தொடர்ந்து கோவையில் பல்வேறு பகுதியில் தொடர்ந்து கள்ளத்தனமாக விற்பனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இன்று கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் திடீரென கோவை வடக்கு மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் சுரேஷ் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அந்த பகுதியில் தடையை மீறி மறைமுகமாக விற்பனை நடைபெற்று வந்த 10க்கும் மேற்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்தார். ஊரடங்கு நேரத்தில் தடையை மீறி விற்பனை செய்து வந்த பிரபல ஜவுளி கடைகளை பூட்டி சீல் வைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க