• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டாஸ்மாக் விற்பனையாளருக்கு கொரோனா உறுதி – மது பிரியர்கள் அதிர்ச்சி

July 7, 2020 தண்டோரா குழு

கோவை வடவள்ளி அடுத்த வீரகேளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு கொரோனா உறுதியானதால், கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள வீரகேளம் பகுதியில் செயல்பட்டு வந்த (1633) டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்த விற்பனையாளருக்கு உடல் நலம் குறைவு காரணமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இன்று அவர் ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடிசியா அழைத்துச்செல்லப்பட்டார்.

இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் டாஸ்மாக் கடை அருகே கிருமி நாசினிகளை தெளித்தனர். மேலும் கடையில் மேற்பார்வையாளர், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.வீரகேரளம் டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு கொரோனா உறுதியான சம்பவம் அங்கு மது வாங்கி சென்ற மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க