• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செய்தியாளர்களுக்கு பி.சி.ஆர் முறையில் கொரோனா பரிசோதனை

April 28, 2020 தண்டோரா குழு

கோவையில் பத்திரிக்கை யாளர்களுக்கு பி.சி.ஆர் முறையில்கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பத்திரிகையாளர்கள் நேரடியாக களத்திற்கு சென்று திரட்டுகிறார்கள்.கொரோனா வைரஸ் ஒரு தொற்று கிருமி என்பதால் அவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவர்கள் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் போன்றோரிடம் பேட்டி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கோவையில் மாவட்ட ஆட்சியர் ராசமணி உத்தரவின் பேரில் 1வாரத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு ரேபிட்டோ டெஸ்ட் எடுக்கப்பட்டது.இதன் மூலம் சரியான முடிவுகள் வராததால் இன்று கோவை சித்தாப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறை,மற்றும் மருத்துவக்குழு சார்பாக பத்திரிக்கையாளர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்ற முறையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் இதனை மாவட்ட ஆட்சியர் ராசமணி ஆய்வு செய்து தனிமனித இடைவெளி மூலம் கொரனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் படிக்க