• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சீன கொடியை கிழித்து, சீன போனை உடைத்த பாஜகவினர்

June 17, 2020 தண்டோரா குழு

இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் மற்றும் கல்வான் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்தியாவை சார்ந்த 20 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
அந்த சம்பவத்தில் சீன ராணுவத்தினரும் பலியாகினர்.

இந்த நிலையில் மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை பஜக அலுவலகத்தில் நடைபெற்றது.அதில் கலந்து கொண்ட பாஜகவினர் இறந்த வீரர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து சீன ராணுவத்தினரின் அத்து
மீறும் செயலை கண்டிக்கும் விதமாக சீன வரை படம் மற்றும் சீன தேசிய கொடியை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சீன கொடி மற்றும் வரைபடத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், பாஜகவினர் சீன செல்போனை தரையில் வீசி உடைத்தனர். இதனிடையே இந்து மக்கள் கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சீன கொடியை கிழிக்க முயன்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க