• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை – பாஜகவினர் புகார்

May 2, 2019 தண்டோரா குழு

கோவையில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என குற்றம்சாட்டி பா.ஜ.கவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து கொடுக்கப்பட்ட மனுவில்,

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை எனவும், இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே இடஒதுகீட்டை முறையாக சிறுபான்மையின பள்ளிகள் முறையாக பின்பற்றுகிறதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பா.ஜ.கவினர் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க