• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

April 23, 2018 தண்டோரா குழு

கோவையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இன்று(ஏப் 23)விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக,கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபேரணி துவங்கியது.இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் வட்டார போக்குவரத்து ஊழியர்கள்,வாகன விற்பனை முகவர்கள்,காவல்துறையினர், போக்குவரத்து துறை பயிற்சி மாணவர்கள்,தன்னார்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாலசுந்தரம் சாலையில் துவங்கிய பேரணி,காந்திபுரம் வழியாக வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது.சாலை விதிகளை மதிப்போம்,தலை கவசம் அணிய வேண்டும்,குடிபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது,உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணி குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில்,

2016 ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியால் 2017ல் தமிழகத்தில்8சதவிகிதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாகவும், விபத்தில்லா மாநிலத்தை உருவாக்க விழிப்புணர்வு அவசியம் என தெரிவித்தார்.மேலும் 29 ஆம் தேதி வரை தினம்தோறும் இரு சக்கர வாகன பேரணி,கலை நிகழ்ச்சி போன்று பல்வேறு வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க