• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத செல்போன் கடைகளுக்கு சீல் !

July 20, 2020 தண்டோரா குழு

கோவையில் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காத செல்போன் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கோவை மாவட்டத்தில் இதுவரை 2183 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை மாநகரப்பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் இன்று மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் உத்தரவின் படி பறக்கும் படை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த இரு செல்போன் கடைகள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதனையடுத்து மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் அக்கடைகளை மூடி சீல் வைத்தனர்.மாநகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் செல்போன் கடைகள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் கடைகளை மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் மற்ற செல்போன் கடை உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க