• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சமூக இடைவெளியுடன் பக்ரீத் கொண்டாட்டம்

August 1, 2020 தண்டோரா குழு

கோவையில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.அதன்படி, பிறை தெரிவதை முன்னிட்டு தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்தை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.

கோவையை பொறுத்தவரையில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் உக்கடம், போத்தனூர், சுந்தராபுரம், கோட்டை மேடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அவரவர் வீடுகளில் இன்று சிறப்பு தொழுகை நடத்தினர்.வைரஸ் தாக்கத்தால் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கோவையில் இஸ்லாமிய மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தங்களது பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மேலும் படிக்க