April 2, 2019
தண்டோரா குழு
கோவை பன்னிமடையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
கோவையில் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள விமானம் மூலம் கோவை வந்த அவர் பின்னர் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூருக்கு சென்றார். அங்கு குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்த அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செய்தார். இந்த சந்திப்பின் போது நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.