• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து முக. ஸ்டாலின் ஆறுதல்

April 2, 2019 தண்டோரா குழு

கோவை பன்னிமடையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

கோவையில் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள விமானம் மூலம் கோவை வந்த அவர் பின்னர் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூருக்கு சென்றார். அங்கு குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்த அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செய்தார். இந்த சந்திப்பின் போது நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க