• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா தொற்றால் சுகாதாரத் துறை ஆய்வாளர் உயிரிழப்பு !

August 16, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மதுக்கரை, அரிசிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் குமார் வயது 56. இவருக்கு கடந்த 13 ஆம் தேதி கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருக்கு தீவிர சுவாசக் கோளாறும் சர்க்கரை நோயும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திடீரென சுவாசக் கோளாறால் அவதிபட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது உடல் இன்று காலை 11 மணிக்கு நஞ்சுண்டாபுரம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க