• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனாவுக்கு மத்தியில் மிரட்டும் டெங்கு காய்ச்சல் !

January 5, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனாவை விட டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தற்போது கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட மொத்தம் 47 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரை 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து உள்ளனர். அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் மட்டுமே கணக்கில் காட்டப்படுகிறார்கள். ஆனால் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் கோவையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்படி பார்க்கும்போது கோவை மாவட்டம் முழுவதும் தினசரி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 200-யை தாண்டும் என கூறப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 40-க்கு மேற்பட்ட இடங்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதிகள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிரமான தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி பகுதிகளில் வார்டுக்கு 15 பேர் வீதம் 1,500 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல புறநகர் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கும் டெங்கு காய்ச்சல் அதிகமுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் அபேட் மருந்து தெளித்தும் கொசு மருந்து அடித்தும் தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே கொரோனா பாதிப்பும் கோவையில் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100-க்கு கீழ் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 120 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலும் மிரட்டி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க