• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குழப்பும் கொரோனா கணக்கு – குழப்பத்தில் கோவை மக்கள்

June 4, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.

கோவையை பொறுத்தவரையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 146 பேரில் 145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். இந்த சூழலில் 28 நாட்களுக்கு கடந்த 2ம் தேதி 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், கோவையில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்
இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாகவும் நேற்று சுகாதாரத்துறை அறிவித்தது. கோவையில் நேற்றைய பாதிப்பு -161
என்ற நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கோவையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153 என தெரிவித்துள்ளது. இன்றைய கணக்கின் படி 8 பேர் மாயமாகி யுள்ளனர். இதனால் கோவை மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஏற்கனவே மொத்த பாதிப்பிற்கும், குணமடைந்தவர்கள், உயிரிழந்தோர் எண்ணிக்கைக்கும் ஒரு எண் குறைவாகவே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க