• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களுக்குபாராட்டு

August 8, 2017 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையத்தில் தப்பிச்செல்ல முயன்ற குற்றவாளியை காவல்துறையினர் பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரயில்வே காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு சன்மானம் வழங்கப்பட்டது.

ஜூலை மாதம் 9-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சரோஜா என்பவர் பயணித்துள்ளார். கோவை ரயில் நிலையத்தில் அவரது 12 பவுன் நகை, பான்கார்டு, ஏடிஎம், ஆதார் அட்டை, கைபேசி உள்ளிட்டவை திருடு போய்விட்டது.

இதனிடையே, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி செந்தில் குமார் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை பார்த்ததும் ஓடியுள்ளார். செந்தில் குமார் அவரை துரத்திச் சென்று பிடிக்க முயன்றார் இதனை பார்த்த ரயில்நிலையம் முன்பு உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகியோர் அந்த வாலிபரை பிடித்து காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த அஜித் என்பதும் அவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்கு உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

ரயில்வே ஐஜி பொன்மாணிக்கம் உத்தரவின் பேரில் ஆட்டோ ஓட்டுநர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு 500 ரூபாயினை ரயில்வேத் துறை டி.எஸ்.பி குணசேகரன் இன்று வழங்கினார்.

மேலும் படிக்க