February 21, 2019
தண்டோரா குழு
கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் குட்டியுடன் திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் வாகனங்கள் மூலமாக ஒலி எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் உள்ள காந்திநகரில் இரவு நேரத்தில் குட்டியுடன் காட்டு யானை ஊருக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் வாகனங்கள் மூலமாக ஒலி எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக இந்த காட்டு யானை குட்டியுடன் வலம் வருவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மதுக்கரை பகுதியில் கடந்த ஆண்டு காட்டு யானை ஊருக்குள் புகுந்து வந்த சூழலில், தற்போது மீண்டும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.