December 12, 2018
குடும்ப பிரச்சனை காரணமாக நிறைமாத கர்ப்பிணி பெண் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து கொலை செய்துள்ள பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள கருப்பராயன் பாளையத்தைச்சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகள் மகேஷ்வரி (27) கட்டிட வேலை செய்து வருகிறார்.
சின்னத்தடாகத்தைச்சேர்ந்த தனபால்(32) என்பவருக்கும் மகேஷ்வரிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு யுவன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருக்கிறது. மேலும் மகேஷ்வரி தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
கடந்த சில தினங்களாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மகேஷ்வரி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனையடுத்து இன்று மதியம் 2.30 மணியளவில் , ரத்தினபுரி தயிர் இட்டேரி புதுப்பாலம் அருகே மகேஷ்வரி தனது தந்தை செல்வராஜ் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் ரயில்வே பாதை அருகே வந்துள்ளார். அப்போது திடீரென வந்த ரயில் முன் தனது குழந்தையுடன் பாய்ந்து மகேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார்.
மகேஷ்வரி மற்றும் யுவன் உடல் இரண்டாக வெட்டப்பட்டு ரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது. அவர் வயிற்றில் இருந்த பச்சிளம் குழந்தை ரயில் மோதி வெளியே வந்து இறந்துள்ளது. இறந்த போனதும் ஆண் பச்சிளம் குழந்தை எனத்தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.