• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குடிபோதையில் லேத் பட்டரை ஊழியர் அடித்து கொலை!

December 28, 2018 தண்டோரா குழு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் குடிபோதையில் லேத் பட்டரை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூரை அடுத்த காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி என்பவரது மகன் ரத்தினசாமி. பட்டணம் பகுதியிலுள்ள தாட்கோ லேத் ஒர்க்‌ ஷாப்பில் ஊழியராக பணியாற்றும் அவர் அவ்வப்போது நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அவர் வீட்டிற்கு செல்லாத நிலையில் இன்று காலை ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அடியில் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் இது தொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்தி சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்.

பின்னர் அங்கு வந்த சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சடலமாக கிடந்த ரத்தினசாமியின் அருகே இரத்தக்கரையுடன் கிடந்த உருட்டு கட்டை ஒன்றை கைப்பற்றியுள்ள போலீசார் குடி போதையில் இருந்த ரத்தினசாமியை போதை ஆசாமிகளால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த ரத்தினசாமியின் உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க