June 4, 2019
தண்டோரா குழு
கோவையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிநீர் பற்றாகுறை இருக்கும் பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என கோவை மக்களவை தொகுதி உறிப்பினர் பி.ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது கோவை தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,
கோவையில் கடுமையான குடிநீர் பஞ்சம் இருப்பதால் குடிநீர் பஞ்சத்தை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பற்றாகுறை இருக்கும் பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஜீவா நகர் பகுதியில் நீண்டகாலமாக இருக்கும் மக்களை அப்புறப்படுத்த கூடாது.குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகளுக்கு இடம் பெயர்வர்களை தவிர அதே அந்த இடத்தில்தான் இருப்போம் என சொல்பவர்களை அப்புறப்படுத்த கூடாது. அங்கேயே குடியிருக்க அனுமதி வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாகவும், நீதிமனறத்திற்கு சென்று மாற்று உத்திரவை பெறும் வரை காத்திருக்க வேணடும் எனவும் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் கோவை நகரத்திற்குள் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தவும், கண்காணிப்பு பணியை அதிகரிக்க வேண்டும். கோவை பீளமேடு பகுதியில் சப்வே கட்ட முடியாத காரணத்தால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதை ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று இருப்பதாகவும், சப் வே அமைக்க இடம் பெறுவது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.