April 14, 2018 தண்டோரா குழு
கோவையில் அனைத்து கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் வருகின்ற ஏப் 17ம் தேதி காலை 10மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்க எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆயர் ராஜசேகரன்,
தமிழகமெங்கும் பல இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தும், சபை மத போதகர்கள் அடித்தும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை உபத்திரவம்படுத்தி மற்றும் பரிசுத்த வேதாகமத்தை எரித்ததை கண்டித்தும், அரசாங்க கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறுகிறது.இந்த நிகழ்வில் கோவை அனைத்து கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் கலந்து கொள்கின்றனர். என்று கூறினார்.