• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கிரிக்கெட் மட்டையால் அடித்து ஒருவர் கொலை – 2 பேர் கைது

September 5, 2020 தண்டோரா குழு

நீலம்பூர் அருகே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யபட்ட காளியப்பன் கொலை வழக்கில் அவரது மற்றும் அவரது வீட்டில் வாடகை குடியிருப்பில் வசிப்பவரான ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டவர் காளியப்பன். இவர் அவரது மனைவியிடம் பத்து வருடங்களாக சண்டையிட்டு பேசாமல் இருந்து வந்திருக்கின்றார்.அவரது சொந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களிடம் அருவருப்பாக பேசுவதுமாக இருந்து வந்துள்ளார்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அவரது மனைவி ராஜாமணி மற்றும் அவர்களது வாடகை குடியிருப்பில் உள்ள ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரும் காளியப்பனை கொலை செய்யத் திட்டமிட்டு நடைபயிற்சியின் போது கிரிக்கெட் மட்டையால் ஹரி கிருஷ்ணன் தலையில் பலமாக அடித்துள்ளார்.

இதையடுத்து, ஹரி கிருஷ்ணன் மற்றும் காளியப்பனின் மனைவி இராஜமணி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க