• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பத்திரிகையாளர்கள் மனித சங்கிலி போராட்டம்

April 2, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவையில் பத்திரிகையாளர்கள் இன்று(ஏப் 2)மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி கோவையில் பத்திரிகையாளர்கள் இன்று ஒருநாள் கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒன்று திரண்ட 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறித்தி கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டது. பத்திரிகையாளர்களின் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க