• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கார் திருடிய வாலிபர் கைது

February 24, 2022 தண்டோரா குழு

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(42).இவர் அதே பகுதியில் உள்ள குவாரி அலுவலகத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

கண்ணன் தனது காரை மளிகை கடை முன்பு நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தி இருந்த கார் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் மதுக்கரை போலீசில் கண்ணன் புகார் தெரிவித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர். இதற்கிடையே திருடுபோன கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் அங்கு சென்ற போலீசார் காரை திருடிச்சென்ற கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த நசித் (23) என்பவரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரை மீட்ட போலீசார் நசித்தை கைது செய்தனர்.

மேலும் படிக்க