• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காட்டு யானை தூக்கி வீசியதில் படுகாயமடைந்த முதியவர் பலி

March 7, 2019 தண்டோரா குழு

கோவை மதுக்கரை வனச்சரகம் , நவக்கரை பிரிவு, எட்டிமடை, பாலக்காடு மெயின் ரோடு மதுக்கரை மிலிட்டரி காலணி அருகே காட்டு யானை ஒன்று குட்டியுடன் பிரகாஷ் என்பவரது தோட்டத்தில் முகாமிட்டது, இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று இரவு முழுவதும் யானையை போலாம்பட்டி காப்புகாட்டுக்குள் விரட்டியடித்தனர், அதன் பின் மீண்டும் இரவு 2.30 மணியளவில் மதுக்கரை அருகே உள்ள காந்திநகர் பகுதிக்குள் மீண்டும் குட்டியுடன் புகுந்த காட்டு யானை அதே பகுதியில் உலாவி வந்தது.

இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர், அப்போது வேலுச்சாமி (70) என்பவரது வீட்டின் அருகே இருந்த யானை வெளியே தூங்கி கொண்டிருந்த வேலுச்சாமி யை தூக்கி வீசியது, இதில் படுகாயமடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்த வனத்துறையினர் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டியடித்தனர், பின் மதுக்கரை போலிசாருக்கு தகவல் அளித்த வனத்துறையினர், வேலுச்சாமி உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க