• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கல் குழியில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 1, 2019 தண்டோரா குழு

கோவையில் கல்லுக்குளியில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை குவாரி பஸ் நிலையம் அருகே உள்ள ஐஎன்டியூசி அலுவலகம் பின்புறம் உள்ள சூட்டிங் ரேஞ் பகுதியில் குடியிறுப்பவர் ராஜேந்திரன் கூலித்தொழிலாளி இவறுடைய மகன் சிவா 8 மற்றும் அதே பகுதியில் குடியிறுப்பவர் ரமேஷ் இவருடைய மகன்கள் தினேஷ் 8 மற்றும்,கார்த்திக் 8 இவர்கள் இருவரும் சகோதரர்கள் மேலும் இவர்கள் 3 பேரும் இன்று மாலை சூட்டிங் ரேஞ் பகுதியில் உள்ள 40 அடி ஆழம் குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். இதில் எதிர்பாரத விதமாக மூன்று பேரும் தவறி விழுந்து மூன்று பே௫ம் உயிர் இறந்துள்ளனர்.

தற்போது இரண்டு பேரின் உடல் கிடைத்துள்ளது மேலும் ஒரு குழந்தையின் உடல் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது கோவை தெற்கு தீயணைப்பு படை வீரர்களும் ,மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் மதுக்கரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க