• Download mobile app
11 May 2024, SaturdayEdition - 3013
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

April 13, 2018 தண்டோரா குழு

கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்,பல்வேறு பகுதிகளில் பதாகைகளை ஏந்தி இன்று(ஏப் 13)விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.அனைவருக்கும் கல்வி கிடக்கக வேண்டும் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்ற நோக்கத்துடன் அது குறித்து பதாகைகளுடன் கோவையில் உள்ள உக்கடம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சாலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும்,அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து கல்வி அறிவை வழங்க வேண்டும் எனவும், அதுவே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

மேலும் படிக்க