December 24, 2018
தண்டோரா குழு
கோவை புரூக்பீல்டில் கல்யான வைபோகும் சீசன் -2 துவங்கியது.
கோவை புரூக்பீல்டில் கல்யான வைபோகும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெற்றது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக சுற்று சூழல் கருதி திருமணம் நிகழ்ச்சிகளில் பிளாஸ்ட் பொருட்களை தவிர்க்க வேண்டும், உணவுகளை வீணடிக்க கூடாது, உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக கோவை புரூக் பீட்ஸ் மாலில் கல்யாண வைபோகம் சீசன் – 2 நிகழ்ச்சி துவங்கியது.
இந்த ஆண்டு கல்யான வைபோகும் நிகழ்ச்சியில் சுற்று சூழலியல் திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நான்கு நாட்கள் நடைபெற இந்த நிகழ்ச்சியில் 60 ஸ்டால்கள் போடப்பட்டு அதில் பல்வேறு நிருவனங்கள் சுற்று சூழலில் சார்ந்த திருமண பொருட்களை காட்சிபடுத்தி உள்ளனர். இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டு, தொடர்பு எண்களை வாங்கி செல்கின்றனர்.