• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கத்தி, அரிவாளுடன் நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டிய இருவர் கைது

August 31, 2019 தண்டோரா குழு

கோவையில் கத்தி, அரிவாளுடன் நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டியவர்களில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ரவுடிகள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் போலீசார் இதுபோன்ற பயங்கர ஆயுதங்களால் கேக் வெட்டி கொண்டாடி புகைப்படங்களை வெளியிடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கோவையில் முதல்முறையாக ஒரு ரவுடி கும்பல் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் சிலர் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். கத்தி, அரிவாளை உயர்த்திப் பிடித்துக்கொண்டு அவர்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இதையடுத்து, அந்தப் புகைப்படங்களை வைத்து, அதில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது,புகைப்படத்தில் உள்ளவர்களில் 2 பேர் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மீது கோவை மாநகர காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆயுதங்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சிவானந்தபுரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (27), அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் (40) ஆகியோரை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்தனர். மேலும் 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க