April 20, 2018 தண்டோரா குழு
கோவையில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி,ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, மத்திய அரசின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் வழங்க கோரி மதிமுகவினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இன்று(ஏப் 20)மனு அளித்தனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கனா 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் வழங்க வலியுறுத்தி இன்று மதிமுக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யன்னனிடம் மனு அளித்தனர்.
மேலும்,இணைய வழி விண்ணப்பம் அளிக்கும் முறையை அரசே செய்வதை போல சேர்க்கையும் அரசே நடத்த வேண்டும்,என கோரிக்கை வைத்தார்.இது குறித்து பள்ளி கல்வி துறை இயக்குனரிடம் தெரிவிக்கப்படும்,என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்ததாக மதிமுகவினர் தெரிவித்தனர்.