• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது; 2 கிலோ கஞ்சா பறிமுதல்

October 3, 2020 தண்டோரா குழு

கோவை போத்தனூர், ஈச்சனாரி ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைக்கபட்ட ரகசிய தகவலின் அடிப்படையில், இரு வேறு இடங்களில் நடந்த சோதனையில், சுமார் 2 1/4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சோதனையின் போது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்ததை பார்த்த போலீசார், அவரை சோதனை செய்த போது, அவரிடம் 1.100 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாரின் விசாரனையில் கஞ்சா விற்பனையில், ஈடுபட்ட நபர் ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்த அனிஷ் பாபு (36) என்பது தெரியவந்தது.இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அணிஷ் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த, 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர்களிடம் 1.250 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இருவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (21) மற்றும் சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (எ) சீனு என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க