• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

October 11, 2021 தண்டோரா குழு

கோவை சாயிபாபா காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈட்பட்டனர்.

அப்போது தடாகம் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்தனர். விசாரணையில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த சூரியபிரகாஷ்(27) என்பதும், கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்றதும் தெரிந்தது.

இதனையடுத்து சாயிபாபா காலனி போலீசார் சூரியபிரகாசை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா, ஒரு செல்போன், மற்றும் ரூ 200 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், மேட்டுப்பாளையம் ரோடு ஜீவா நகர் ஜங்சனில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேலாண்டிபாளையம் திலகர் தெருவை சேர்ந்த ஷியாம் ராகுல்(21) என்பவரை சாயிபாபா காலனி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, ஒரு செல்போன், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க