• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நேரத்தில் 14 போர் விமானங்கள் அணி வகுப்பு !

October 16, 2021 தண்டோரா குழு

முதல் முறையாக கோவை சூலூர் விமானப்படை தளத்தில் ஒரே நேரத்தில் 14 தேஜஸ் விமானங்கள் அணிவகுத்துச் சென்றது.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் மற்றும் தேஜஸ் விமானங்கள் அவ்வப்போது விமானப்படை அதிகாரிகள் கொண்டு பயிற்சி எடுப்பது வழக்கம். இந்நிலையில் 14 தேஜஸ் போர் விமானங்கள் ஒரே நேரத்தில் சூலூர் விமானப்படை தளத்தில் மேலே பறந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டது. மேலும் 14 தேஜாஸ் விமானங்கள் ஒரே நேரத்தில் பறப்பது இதுவே முதல் முறையாகும்.

சீனா அவ்வப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி வருவதால் இந்தியா போர் விமானங்களை தயார் நிலையில் வைக்க தற்பொழுது பயிற்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்பான இந்த தேஜஸ் விமானம் வேகமாகவும், திடீரென பக்காவாட்டிலும், மேலும் கீழுமாகவும் சுழன்று கூடியது.

இந்த ஆயுதம் தாங்கிய விமானம் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட நிலையில், அதன் ஒத்துழைப்பால் தற்போது இந்த சாகசமும் சாத்தியமாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க