• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே நாளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் கைது : ரூ.31,120 பறிமுதல்

January 16, 2023 தண்டோரா குழு

கோவை புறநகர் போலீசாருக்கு பல்வேறு இடங்களில் மெகா சூதாட்டம் நடைப்பெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கோமங்கலம் போலீசார் கடிமேடு பகுதியில் சோதனை செய்தனர். அங்கு 8 பேர் ரூ.21, 970 வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பொங்காலியூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 4 பேரை கைது செய்து ரூ.2300-யை பறிமுதல் செய்தனர்.

ஆனைமலையில் 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2350-யை பறிமுதல் செய்தனர்.இதேபோன்று பேரூர் மத்திப்பாளையத்தில் 4 பேர், நெகமம் அடுத்த செங்குட்டைப்பாயைத்தில் 2 பேர், மதுக்கரை வலுக்குப்பாறையில் 4 பேர், பெரிய நாயக்கன்பாளையத்தில் 8 பேர் ஆகிய 18 பேரை சேவல் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7,800 பறிமுதல் செய்யப்பட்டது.

பொங்கல் விடுமுறையான நேற்று ஒரே நாளில் மெகா சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 41 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.31,120-யை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க